» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை
சனி 7, பிப்ரவரி 2026 12:57:30 PM (IST)

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று தூத்துக்குடியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி புனித லசால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, 11-ம் வகுப்பு பயிலும் 80 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: "மாணவர்கள் தற்காலப் போட்டி உலகிற்கு ஏற்ப தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோரின் கஷ்டங்களை உணர்ந்து, படிப்பில் கவனம் சிதறாமல் ஆசிாியர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். கல்வியே உங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தரும் என்றார்.
மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய அமைச்சர், பள்ளிக்கு நவீனத் தொடுதிரை (Touch Screen) வசதியையும் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பள்ளி தாளாளர் பிரிட்டோ, தலைமையாசிரியர் ஜான்பால் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)


ஆமா ஆமாFeb 7, 2026 - 01:19:25 PM | Posted IP 162.1*****