» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)
நெல்லையில் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், சிவகங்கையைச் சேர்ந்த ராஜலட்சுமி (43) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜினி (28) ஆகிய இருவரும் தங்களை அதிகாரிகளாகக் காட்டிப் பழகியுள்ளனர். நெல்லை சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ.8 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் மோசடி உறுதியானதைத் தொடர்ந்து, சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டையில் ரூ.5.06 கோடியில் மரபணு ஆய்வகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 14, பிப்ரவரி 2026 12:18:28 PM (IST)

ரயில்வே பெண் ஊழியரைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை!
சனி 14, பிப்ரவரி 2026 8:25:03 AM (IST)

சிவன் கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நெல்லையப்பர் கோவில்!
சனி 14, பிப்ரவரி 2026 8:09:54 AM (IST)

பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

