» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழகத்தில் 20 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நெல்லைக்கு புதிய போலீஸ் கமிஷனர் நியமனம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:25:05 AM (IST)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை: ஆயுதப்படை டி.ஜி.பி-யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை கமிஷனர்: ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், திருநெல்வேலி மாநகரக் காவல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐ.ஜி: ஆவடி கூடுதல் கமிஷனராக இருந்த பவானீஸ்வரி, சென்னை தலைமையக ஐ.ஜி-யாக மாற்றப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி மாற்றங்கள்: நெல்லை கமிஷனராக இருந்த என்.மணிவண்ணன் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி-யாகவும், கோவை சரக டி.ஐ.ஜி வி.சி.மோகன் திண்டுக்கல் சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதர முக்கிய நியமனங்கள்:
எச்.எம்.ஜெயராம்: சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டன்ட் ஜெனரலாக நியமனம்.
ஏ.ஜி.பாபு: போலீஸ் நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பி-க்கள் இடமாற்றம்: திருச்சி, சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் எஸ்.பி-க்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு எஸ்.பி-யாக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)

டிரான்ஸ்பார்மர்கள் திருடிய லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:29:29 AM (IST)

திருநெல்வேலி மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் : பொதுப் பார்வையாளர்கள் - ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 23, மார்ச் 2026 4:48:07 PM (IST)

நெல் கொள்முதல் நிலையங்களைக் கண்காணிக்கச் சிறப்பு குழு: ஆட்சியர் தகவல்!
திங்கள் 23, மார்ச் 2026 4:38:08 PM (IST)

தந்தை கொலையில் குற்றவாளிகள் பிடிபடாததால் விரக்தி: மகள் தற்கொலை!
திங்கள் 23, மார்ச் 2026 12:34:43 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
திங்கள் 23, மார்ச் 2026 12:31:04 PM (IST)

