» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் நள்ளிரவில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் : பொதுமக்கள் கடும் அவதி

திங்கள் 23, மார்ச் 2026 11:23:09 AM (IST)



தூத்துக்குடியில் நள்ளிரவில் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை காரணமாக பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். 

துறைமுக நகரான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் அதிகளவில் புகை வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

குறிப்பாக நகரின் மேற்கு பகுதிகளான கோரம்பள்ளம், இபி காலனி, மாதவன் நகர், மடத்தூர், சோரீஸ்புரம், பி அன் டி காலனி, திரவிய ரத்ன நகர், கதிர்வேல் நகர், அசோக் நகர், பாக்கியலட்சுமி நகர், பால்பாண்டி நகர், மில்லர்புரம், அண்ணா நகர், டிஎம்பி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மூச்சுத் தினறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். குழந்தைகள், முதியவர்களுக்கு சுவாச பிரச்சினை, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படுகிறது. தொடர்ந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் புகையை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 


மக்கள் கருத்து

சங்கரன்Mar 23, 2026 - 10:16:16 PM | Posted IP 162.1*****

பாவம் மக்கள்

ராஜாMar 23, 2026 - 01:25:02 PM | Posted IP 172.7*****

விவி டிட்டானியம் தான் அட்டூழியம்

ஏரியா காரன்Mar 23, 2026 - 01:15:22 PM | Posted IP 162.1*****

எந்த தொழிற்சாலை ? பெயர்களை வெளியிடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory