» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெற்றி பெற வேண்டி குவியும் அரசியல் பிரமுகர்கள் : களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!

திங்கள் 23, மார்ச் 2026 3:44:24 PM (IST)



தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெற்றிக்காக வேண்டி வழிபாடு நடத்தும் அரசியல் பிரமுகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளதால், அரசியல் கட்சியினர் பலர் தங்களுக்கு சீட் வேண்டி விருப்ப மனு அளித்துள்ளனர்.

விருப்ப மனு அளித்தவர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற வேண்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குப் படையெடுத்து வருகின்றனர். கூட்டம் இல்லாத நேரங்களில் சத்தமில்லாமல் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், முருகன் சூரனை சம்ஹாரம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால், குரு அருளால் வெற்றி பெற வேண்டி அரசியல் பிரமுகர்கள் தங்களது விருப்ப மனுக்கள் மற்றும் வேட்பு மனுக்களுடன் வந்து பூைஜ செய்கின்றனர்.

சிலர் எதிரிகளை வீழ்த்த 'சத்ரு சம்ஹார யாகம்' நடத்தியும் வழிபாடு செய்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டமும், மற்ற நாட்களில் அரசியல் பிரமுகர்களின் வருகையும் அதிகரித்துள்ளதால் கோயில் வளாகம் களைகட்டியுள்ளது. அரசியல் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் வழிநெடுகிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory