» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாய்க்குட்டி கீறியதால் விபரீதம்: பெண் உயிரிழப்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 8:34:48 AM (IST)
தூத்துக்குடி அருகே, வளர்ப்பு நாய் கீறியதில் ரேபிஸ் நோய் பாதிப்புக்குள்ளான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே, சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகனின் மனைவி சுமதி (47). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்குட்டிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது அந்த நாய்க்குட்டியை சிகிச்சைக்காக சுமதி தூக்கிச் சென்றபோது, அவரது தோளில் நாயின் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டது.
நாய்க்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்ததால், சிறிய நகக்கீறல் தானே என்று கருதி சுமதி அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், நிலைமை மிகவும் கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைக்காகத் திங்கள்கிழமை மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
சுமதியின் உடல் சில்லாங்குளம் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ரேபிஸ் என்பது ஒரு தொற்றுநோய் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
வளர்ப்புப் பிராணிகள் கடித்தாலோ அல்லது கீறினாலோ முறையான மருத்துவ ஆலோசனை பெற்றுத் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)


Nan thanApr 15, 2026 - 12:42:12 PM | Posted IP 104.2*****