» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 9:24:21 PM (IST)
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கையாக மரணம் வரும் வரை சிறையிலேயே இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமி ஒருவரை ஏரல் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் (42) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மகாராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையை முடித்த நீதிபதிபிரீத்தா இன்று (15.04.2026) தீர்ப்பு வழங்கினார். அதில்: பாலியல் வன்கொடுமைக்கு குற்றவாளி மகாராஜனுக்கு இயற்கையாக மரணம் வரும் வரை ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம். கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு ஆதாரங்களைச் சமர்ப்பித்து, குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததற்காக ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ், முன்னாள் ஆய்வாளர் லெட்சுமி பிரபா, அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ, தலைமை காவலர் அரிராணி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் பாராட்டித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

