» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சட்டநகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் மத்திய அரசின் ‘தொகுதி மறுவரையறை’நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியில் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்குச் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தலைமை தாங்கினார். இதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டநகலை அவர்கள் தீயிட்டு எரித்துத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இதில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் இந்த "கருப்புச் சட்டத்தை" திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் நகை பறிக்க முயற்சி: அறநிலையத்துறை ஊழியர் கைது!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 8:27:17 AM (IST)

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

திருநெல்வேலி தொகுதியில் தபால் வாக்குப்பதிவு : பொதுப் பார்வையாளர் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:54:44 PM (IST)

