» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறையை அளிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படியும், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்ய ஏதுவாக, தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தமது வாக்குரிமையை செலுத்த ஏதுவாக தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தற்காலிக தினக்கூலி, மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் தேர்தல் தினத்தன்று அவர்தம் வாக்குரிமையை செலுத்த சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறையை அளிக்க வேண்டும். மேலும், தேர்தல் நாளன்று வாக்களிப்பது அவசியம் என்பதையும் நிறுவன உரிமையாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நாளான 23.04.2026 மற்றும் 29.04.2026 ஆகிய தினங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு வங்க தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய தொழில் நிறுவனங்கள் மேற்படி வாக்குப்பதிவு நடைபெறும் தினங்களில் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது தொழிலாளர் துறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 0462- 2555014, 94422 29502, 94422 61287 மற்றும் 95664 30992 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory