» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது - 6 பைக்கள் பறிமுதல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:27:56 PM (IST)
நெல்லை அருகே தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி, கொண்டாநகரம், ராஜீவ் காந்தி நகர், சிவசக்தி நகர், பழவூர், பட்டன்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு நாட்களில் நள்ளிரவில் திருடு போயின.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரஞ்சித் (30), மகாராஜன் (56) உள்ளிட்ட 6 பேர் அளித்த புகாரின் பேரில், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் போலீஸார் நடத்திய சோதனையில் பைக் திருட்டில் ஈடுபட்ட பல்லிக்கோட்டை மற்றும் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள், அரசன்குளத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (19), உகந்தான்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (19) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டன. மேலும், இந்தத் திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய, தற்போது தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

2016 ராதாபுரம் தேர்தல் முடிவுகள் செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
புதன் 3, ஜூன் 2026 4:55:48 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: ஆட்சியர் ஆனந்த் மோகன் அதிரடி ஆய்வு!
புதன் 3, ஜூன் 2026 3:41:32 PM (IST)

ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கடை உரிமையாளர் கைது!
புதன் 3, ஜூன் 2026 11:23:16 AM (IST)

அமலி பள்ளி ஆசிரியை இனிகோவுக்கு வெற்றி விழா
புதன் 3, ஜூன் 2026 8:55:24 AM (IST)

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி : ஜூன் 4ஆம் தேதி தொடங்குகிறது
செவ்வாய் 2, ஜூன் 2026 10:32:11 AM (IST)

ஆலங்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் வன்னி அரசு ஆறுதல்!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:10:13 AM (IST)


