» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!

புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் தோமையார்புரம் பகுதியில் தூண்டில் வளைவு மற்றும் விஜயாபதி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தோமையார்புரம் பகுதியில் ரூ.16.05 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாகவும், தூண்டில் வளைவு அமையவுள்ள இடம் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அலுவலர்களுடன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்

தொடர்ந்து, இராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகம், விஜயாபதி கிராம ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், விஜயாபதி ஊராட்சியில் நபார்டு சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பில் 2.77 கி.மீ நீளம் சாலை மற்றும் பாலப் பணிகள் நடைபெறுவது குறித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிலுவையன் பிள்ளை கால்வாய் அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும், விஜயாபதி ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43.50 இலட்சம் மதிப்பில் 750 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்தும், இடிந்தகரை பகுதியில் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 150 வீட்டு குடிநீர் இணைப்புகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆய்வில், உதவி இயக்குநர் (தணிக்கை ஊராட்சிகள்) இங்கர்சால், இராதாபுரம் வட்டாட்சியர் வில்லுடையார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமுவேல்ராஜ், அகஸ்தஷ் அலெக்ஸ், பொறியாளர் செல்வி.சுதா, மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory