» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 2, ஜூலை 2026 4:14:27 PM (IST)

திருச்செந்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.18 கோடியில் புதிய பேருந்து நிலையம் உள்பட வரும் பல்வேறு முக்கிய மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதிக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பயணிகளின் வசதிக்காக, நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரூ.18 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, பணிகளின் தற்போதைய தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த அவர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைந்து முடித்துப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் - திருநெல்வேலி சந்திப்புச் சாலையில் நடைபெற்று வரும் நகராட்சிப் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இச்சாக்கடைப் பணிகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் : ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
புதன் 1, ஜூலை 2026 5:56:42 PM (IST)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு
புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:17:38 AM (IST)

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)


