» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொதுமக்களுக்குப் பாதுகாப்பே இல்லை: கனிமொழி எம்பி கடும் கண்டனம்!
வெள்ளி 3, ஜூலை 2026 12:12:51 PM (IST)
வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் அவரது 5 வயது மகன் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தையும் வேதனையையும் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: "திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தற்போது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது.முன்விரோதம் காரணமாகத் தொடர்ந்து நீடித்து வரும் இப்பிரச்சனையில் தற்போதைய அரசு மெத்தனமாகச் செயல்படக் கூடாது. இ கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை எவ்விதத் தாமதமும் இன்றி விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும், பதற்றம் நிலவும் அப்பகுதியில் மீண்டும் அமைதி திரும்புவதற்கான அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

9 உயிர்களைப் பலிவாங்கிய தண்ணீர்ப் பிரச்சினை: நெல்லை கொடூரக் கொலைகளின் பின்னணி!
சனி 4, ஜூலை 2026 9:10:52 PM (IST)

குற்றாலம் அருவிகளில் சீசன் களைகட்டியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்
சனி 4, ஜூலை 2026 12:28:42 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது : சிங்கப்பெண் அதிரடிப்படையால் சிக்கியனார்!
வெள்ளி 3, ஜூலை 2026 8:39:43 AM (IST)

மகேந்திரகிரியில் அதிக எடை ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவு!
வெள்ளி 3, ஜூலை 2026 8:35:22 AM (IST)

தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை; மற்றொரு மகன் படுகாயம்: நெல்லையில் பயங்கரம்!
வெள்ளி 3, ஜூலை 2026 7:48:33 AM (IST)

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய அரசியல் மோசடி - நெல்லையில் வைகோ பேட்டி
வியாழன் 2, ஜூலை 2026 10:42:13 AM (IST)



ஆமாJul 6, 2026 - 12:14:25 PM | Posted IP 172.7*****