» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிப் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்கு இயந்திரவியல் (Mechanical) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E) அல்லது பட்டயம் (Diploma) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பி.ஏ. (B.A.), பி.எஸ்சி. (B.Sc.), பி.காம். (B.Com) போன்ற இளங்கலைப் பட்டம் பெற்ற தமிழக மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலோ அல்லது மே 2026-லோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்ட (NATS) அதிகாரப்பூர்வ வலைதளமான https://nats.education.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 28, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)


