» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!

வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம், நாகர்கோவில் மண்டலத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டிற்கான தொழில் பழகுநர் பயிற்சிப் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கு இயந்திரவியல் (Mechanical) மற்றும் ஆட்டோமொபைல் (Automobile) பிரிவுகளில் பொறியியல் பட்டம் (B.E) அல்லது பட்டயம் (Diploma) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் பி.ஏ. (B.A.), பி.எஸ்சி. (B.Sc.), பி.காம். (B.Com) போன்ற இளங்கலைப் பட்டம் பெற்ற தமிழக மாணவர்களும் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளிலோ அல்லது மே 2026-லோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் தேசியத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்ட (NATS) அதிகாரப்பூர்வ வலைதளமான https://nats.education.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 28, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நாகர்கோவில் மண்டலப் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory