» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் பெண் கொடூர கொலை: மீனவர் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 4:24:58 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டின் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, தலையில் தாக்கிக் கொலை செய்த மீனவரைத் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட இவர், தனது மகள் சத்யாவுடன் வசித்து வந்தார். தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த முத்துலட்சுமி, கடந்த 15-ஆம் தேதி மகள் வெளியூருக்குச் சென்றதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அன்று இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் முத்துலட்சுமி தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது, அவர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துலட்சுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதையறிந்த அவரது மகள் சத்யா மற்றும் உறவினர்கள், கொலையாளியைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலைப் பெறுவோம் எனக் கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த லோபஸ் என்பவரின் மகன் இன்னசென்ட் ரீகன் (34) என்பவர் முத்துலட்சுமியின் தலையில் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரைப் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட மீனவர் இன்னசென்ட் ரீகன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து தூத்துக்குடியில் திருட்டு பைக்கில் சுற்றித் திரிந்துள்ளார். சம்பவத்தன்று திண்ணையில் தனியாகப் படுத்திருந்த முத்துலட்சுமியிடம் பணம் எதுவும் உள்ளதா எனப் பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, முத்துலட்சுமி விழித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இன்னசென்ட் ரீகன், முத்துலட்சுமியின் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இன்னசென்ட் ரீகன் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? – அன்புமணி கண்டனம்!
சனி 25, ஜூலை 2026 11:25:26 AM (IST)

நாங்குநேரி வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வெள்ளி 24, ஜூலை 2026 5:17:33 PM (IST)

தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 24, ஜூலை 2026 10:25:18 AM (IST)

பழைய குற்றாலத்தில் சட்டவிரோத வாகனக் கட்டண வசூல் : ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 24, ஜூலை 2026 8:44:06 AM (IST)

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை: கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அவரது தாய் கைது!
வெள்ளி 24, ஜூலை 2026 7:50:01 AM (IST)

நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஆட்சியர் ஆனந்த் மோகன் அழைப்பு!
வியாழன் 23, ஜூலை 2026 5:43:08 PM (IST)



NAAN THAANJul 25, 2026 - 02:47:48 PM | Posted IP 172.7*****