» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையா? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

வியாழன் 30, ஜூலை 2026 10:12:24 AM (IST)

தூத்துக்குடியில் மீண்டும் பசுமைத் தாமிர உருக்காலை அமைப்பதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வருகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைத்து மூடியது.தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை, தமிழக அரசுடன் இணைந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பும் சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்தி வென்றது.

இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் பசுமைத் தாமிர உருக்காலை என்ற பெயரில் மீண்டும் ஆலை தொடங்க அனுமதி கோரிச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் அரி ராகவன் மூலமாக இடைமனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் இணைந்துள்ளதாகக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் மற்றும் க. வசந்தி (பண்டாரம்பட்டி) ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில்: "பசுமைத் தாமிரம் என்ற பெயரில் மீண்டும் தூத்துக்குடியில் கால்பதிக்கத் துடிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்தி, அப்பகுதியின் சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாப்போம்." என்று தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 30, 2026 - 12:36:05 PM | Posted IP 172.7*****

திமுக தான் எல்லாத்துக்கு காரணம்.

MAKKALJul 30, 2026 - 10:46:46 AM | Posted IP 104.2*****

BAN BAN BAN STERLITE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory