» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வகுப்பறையில் வலிப்பு ஏற்பட்டுப் பள்ளி மாணவர் உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்!
வியாழன் 30, ஜூலை 2026 9:36:54 PM (IST)
தூத்துக்குடியில் பள்ளி வகுப்பறையில் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி செல்சீனி காலனி 4-வது தெருவைச் சேர்ந்த குருஸ் ராஜா என்பவரது மகன் கார்த்திகேயன் (13). காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இந்த சிறுவன், பிரையண்ட் நகர் 3-வது தெருவில் உள்ள செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுவயது முதலே வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த கார்த்திகேயனுக்கு, இன்று காலை பள்ளி வகுப்பறையில் இருந்தபோது சுமார் 10 மணி அளவில் திடீரெனக் கடுமையான வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக மாணவனின் தாயார் குத்தாலம்மாளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தாயாரும் பள்ளி ஊழியர்களும் சேர்ந்து, கார்த்திகேயனை ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)


