» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கருங்குளம் அருகே வாழைத் தோட்டத்தில் தீ விபத்து

புதன் 5, ஆகஸ்ட் 2026 9:43:20 AM (IST)

கருங்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கருங்குளம் அருகே திடீரென வாழைத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீ வேகமாகப் பரவியது.

இதில், சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் நாசமாகின. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வாழைகள் எரிந்து நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.


மக்கள் கருத்து

எப்படிAug 8, 2026 - 09:53:24 AM | Posted IP 104.2*****

வாழை மரத்தில் தீபிடிக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory