» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தந்தை திட்டியதால் விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 12:53:23 PM (IST)
தந்தை திட்டியதால் மனமுடைந்து களைக்கொல்லி விஷம் அருந்திய இளைஞர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கோமாநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த இசக்கியப்பன் என்பவரின் மகன் வரதராஜன் (22). இவர் கடந்த 9-ஆம் தேதி தந்தை கண்டித்ததால் மனவேதனையடைந்த வரதராஜன், தோட்டத்தில் இருந்த களைக்கொல்லி நஞ்சைக் குடித்துள்ளார்.
உடனடியாக அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வரதராஜன், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்விற்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சாத்தான்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)



Naan thaanAug 15, 2026 - 12:31:45 PM | Posted IP 162.1*****