» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் : அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:31:19 AM (IST)

தூத்துக்குடியில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
தூத்துக்குடி என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 90,700 வீதம் மொத்தம் ரூ.45,35,000 மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சக்கர வாகனங்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்.
என்.எல்.சி. குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் .காமாட்சி, என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் முதன்மை அதிகாரி அரவிந்த் ராஜா, பொது மேலாளர் (பராமரிப்பு) பொன்னுசாமி, துணை பொது மேலாளர் (மனிதவளம்) சரவணன் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)



naan thaanAug 15, 2026 - 11:41:45 AM | Posted IP 162.1*****