» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை ஒழிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்: எஸ்பி வேண்டுகோள்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 5:43:13 PM (IST)

தூத்துக்குடியில், மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது மற்றும் பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்க நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து 350 ஆசிரியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவபிரசாத் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
எஸ்பி வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்: மாணவர்களிடையே போதைப்பொருட்களினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீமைகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் சீரான முறையில் சீருடை அணிவது, தலைமுடியைச் சீராக வைத்திருப்பது உள்ளிட்ட ஒழுக்க விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவர்கள் தங்கள் சாதிகளைக் குறிக்கும் வகையில் வண்ணமயமான கயிறுகள் அணிவதைத் தவிர்க்க ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மாணவர்களிடையே மோதல்கள் அல்லது பிற பிரச்சினைகள் எழுந்தால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம். சீருடை அணியாத காவலர்கள் மூலம், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களை நல்வழிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கக் காவல்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் எனத் கேட்டுக்கொண்ட எஸ்பி, போதைப்பொருள் பயன்பாடு குறித்துத் தகவல் தெரிந்தால் 8300014567 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லாரி மோதியதில் பரிதாபம்: ஒரே மொபட்டில் சென்ற 2 பெண்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:26:52 AM (IST)

குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்; அருவிகளில் உற்சாகக் குளியல்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 10:20:57 AM (IST)

போலீசாரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய ரவுடி அதிரடி கைது: நெல்லை அருகே பரபரப்பு!
சனி 15, ஆகஸ்ட் 2026 9:02:50 AM (IST)

திருநெல்வேலி அரசு பொருட்காட்சி முன்னோற்பாடு பணிகள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்!
வெள்ளி 14, ஆகஸ்ட் 2026 4:32:39 PM (IST)

கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடியில் உழைக்கும் மகளிர் விடுதி: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 5:17:28 PM (IST)

போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவு: சார்பதிவாளர் மீது வழக்கு - 2 பெண்கள் கைது!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 11:35:26 AM (IST)


