» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை உயர்வு: நாளை முதல் அமலுக்கு வருகிறது!
சனி 2, மார்ச் 2024 12:45:04 PM (IST)
ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகின்றது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனை மட்டுமல்லாமல் நெய், தயிர், பால் பௌடர், பாதாம் பௌடர், குல்பி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள், குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் வகையில் ஆவினில் பல்வேறு வகையான ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிலையில், ஆவின் சார்பின் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, 65 மி.லிட்டர் சாக்கோபார் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், வென்னிலா ரூ.28 முதல் ரூ.30 ஆகவும், கிளாசிக் கோன் வென்னிலா மற்றும் கிளாசிக் கோன் சாக்லேட் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் இ.பி.எஸ். ஏமாற்ற முடியாது : டி.டி.வி. தினகரன் பேட்டி
புதன் 17, செப்டம்பர் 2025 12:19:47 PM (IST)

காதல் மனைவி கோபித்து சென்றதால் விபரீதம் : வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!
புதன் 17, செப்டம்பர் 2025 11:47:38 AM (IST)

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 17, செப்டம்பர் 2025 11:34:36 AM (IST)

சரியான கதை கிடைத்தால் கமலுடன் இணைந்து நடிப்பேன் : ரஜினிகாந்த் பேட்டி!
புதன் 17, செப்டம்பர் 2025 11:18:22 AM (IST)
