» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
திங்கள் 4, மார்ச் 2024 11:24:41 AM (IST)
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 114 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 206 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 313 மாணவர்கள், 10 ஆயிரத்து 801 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 142 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இதற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 5 காப்பகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுகளை 24 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளனர்! - மு.க.ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 10:46:00 AM (IST)

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்!
திங்கள் 18, மே 2026 10:35:35 AM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

எடப்பாடியாருக்கு தூத்துக்குடி அதிமுக முழு ஆதரவு: எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தீர்மானம்!
திங்கள் 18, மே 2026 10:11:13 AM (IST)


