» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
திங்கள் 4, மார்ச் 2024 11:24:41 AM (IST)
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 114 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 206 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 313 மாணவர்கள், 10 ஆயிரத்து 801 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 142 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இதற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 5 காப்பகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுகளை 24 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி : நேரடி மாணவர் சேர்க்கை
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:35:40 PM (IST)

தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர்: மனநல மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:20:34 PM (IST)

கோ ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.5கோடி : ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:52:40 PM (IST)

நாகர்கோவிலில் ரூ.50 இலட்சத்தில் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலை அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:39:27 PM (IST)

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை விக்கிரகம் புறப்பாடு
வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:31:26 PM (IST)

தமிழக காவல்துறையில் 3665 பணி இடங்கள் : செப்.21 வரை விண்ணப்பிக்கலாம்..!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:55:39 PM (IST)
