» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
திங்கள் 4, மார்ச் 2024 11:24:41 AM (IST)
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 114 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 206 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 313 மாணவர்கள், 10 ஆயிரத்து 801 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 142 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இதற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 5 காப்பகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுகளை 24 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு வலை : தலைமை ஆசிரியர் மீதும் வழக்குப் பதிவு!
செவ்வாய் 18, நவம்பர் 2025 9:43:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)

கொலை - கொலை முயற்சி வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:33:50 PM (IST)

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
செவ்வாய் 18, நவம்பர் 2025 5:41:49 PM (IST)

தமிழக அரசு அறிவித்த ரூ.56 கோடி நிவாரண நிதி வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:35:47 PM (IST)

வ.உ.சிதம்பரனாருக்கு பாராளுமன்றத்தில் சிலை நிறுவப்படும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:24:44 PM (IST)




