» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது
திங்கள் 4, மார்ச் 2024 11:24:41 AM (IST)
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 20 ஆயிரத்து 114 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 90 தேர்வு மையங்களில் பிளஸ்-1 தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 206 பள்ளிகளில் படிக்கும் 9 ஆயிரத்து 313 மாணவர்கள், 10 ஆயிரத்து 801 மாணவிகள் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 114 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 142 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதினர்.
இதற்கான வினாத்தாள்கள் மாவட்டத்தில் 5 காப்பகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் கட்டுகளை 24 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் தலைமையில் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுகள் வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வரி செலுத்தாவி்ட்டால் ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் : வருமான வரித்துறை நோட்டீஸ்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:46:11 PM (IST)

நகை திருட்டு புகார் கூறிய நிகிதாவை கைது செய்ய வேண்டும்: அஜித்குமாரின் தாய் ஆவேசம்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 4:25:54 PM (IST)

மதுரையில் தேர்தல் பொதுக் கூட்டம்: மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
வியாழன் 5, பிப்ரவரி 2026 12:04:01 PM (IST)

நாட்டில் என்ன நடக்கிறது என்றே விஜய்க்கு தெரியவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
புதன் 4, பிப்ரவரி 2026 3:43:19 PM (IST)

நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை: அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கை தாக்கல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:35:51 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

