» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்

வெள்ளி 19, ஜூலை 2024 10:26:36 AM (IST)

தூத்துக்குடியில் காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தாளமுத்துநகர் மேற்கு காமராஜ் நகரைச் சேர்ந்தவர் இசக்கி மகள் சந்தனமாரி (23). இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம். அந்த வாலிபர் சில தினங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சந்தனமாரி இன்று காலை தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அம்மா ஞானத்தாய் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory