» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கஞ்சா வியாபாரியிடம் பணம் பறித்த எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்'

திங்கள் 16, செப்டம்பர் 2024 8:40:50 AM (IST)

தூத்துக்குடி அருகே கஞ்சா வியாபாரியிடம் பணம் பறித்த எஸ்.ஐ., ஏட்டு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்துார் காவல் நிலையத்தில் எஸ்.ஐ., சுந்தரம், ஏட்டு குணசுந்தர் ஆகிய இருவரும் அதே பகுதி கஞ்சா வியாபாரி ஒருவரிடம் ரூ.9 லட்சம் அபகரித்தனர். கஞ்சா வியாபாரி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் புகார் தெரிவித்தார். 

திருச்செந்துார் டி.எஸ்.பி. வசந்தராஜ் விசாரித்தார். பணம் பறித்தது உண்மை என தெரியவந்ததால் எஸ்.ஐ., ஏட்டு, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் நேற்று இருவரும் 'சஸ்பெண்ட் 'செய்யப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory