» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளி சிறையில் தற்கொலை!

திங்கள் 16, செப்டம்பர் 2024 11:56:53 AM (IST)

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். 

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் 5-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக 60 வயது விவேகானந்தன் மற்றும் 19 வயதேயான கருணாஸ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன், இன்று(செப்.16) காலை அறையின் ஜன்னலில், துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமியை கொலை செய்த வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனெவே சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

இதுSep 16, 2024 - 12:18:58 PM | Posted IP 172.7*****

சூப்பர் செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory