» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)
மதுரையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகைகளை திருடிய துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 14.11.2024 அன்று இந்த வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் உத்தரவுப்படி ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் 2023-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வங்கியில் 9 நபர்கள் அடகு வைத்த 561.5 கிராம் (70 பவுன்) தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் வங்கி லாக்கரில் இல்லை.
ேமலும் வாடிக்கையாளர்கள் 9 பேர் தங்களது நகைகளை அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகைகள் மாயமாகி இருந்தது. நகைகள் காணாமல் போனது பற்றி அதிகாரிகள் கேட்டபோது, துணை மேலாளர் மழுப்பலான தகவல்களை கூறியுள்ளார்.
இதையடுத்து பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான், காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திதில் வங்கி மேலாளருக்கு தெரியாமல் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் நகைகளை துணை மேலாளர் கணேஷ் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் மதுரை ஆனையூர் மல்லிகை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து பொறுப்பேற்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 10:31:06 AM (IST)

இயேசு கிறிஸ்து அவதரித்த இந்நாளில் உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும்: மோகன் சி லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து
வியாழன் 25, டிசம்பர் 2025 8:28:52 AM (IST)

கொலை வழக்கில் 5பேருக்கு சிறை தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
புதன் 24, டிசம்பர் 2025 8:10:41 PM (IST)

ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 24, டிசம்பர் 2025 5:26:30 PM (IST)

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 4 ரவுடிகள் கைது : கஞ்சா, புகையிலை விற்ற 3பேர் கைது!
புதன் 24, டிசம்பர் 2025 3:31:43 PM (IST)

கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
புதன் 24, டிசம்பர் 2025 12:16:42 PM (IST)

