» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)
மதுரையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகைகளை திருடிய துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 14.11.2024 அன்று இந்த வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் உத்தரவுப்படி ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் 2023-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வங்கியில் 9 நபர்கள் அடகு வைத்த 561.5 கிராம் (70 பவுன்) தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் வங்கி லாக்கரில் இல்லை.
ேமலும் வாடிக்கையாளர்கள் 9 பேர் தங்களது நகைகளை அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகைகள் மாயமாகி இருந்தது. நகைகள் காணாமல் போனது பற்றி அதிகாரிகள் கேட்டபோது, துணை மேலாளர் மழுப்பலான தகவல்களை கூறியுள்ளார்.
இதையடுத்து பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான், காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திதில் வங்கி மேலாளருக்கு தெரியாமல் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் நகைகளை துணை மேலாளர் கணேஷ் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் மதுரை ஆனையூர் மல்லிகை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)
