» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகை மாயம்: துணை மேலாளர் கைது!
புதன் 19, பிப்ரவரி 2025 12:18:31 PM (IST)
மதுரையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் தங்க நகைகளை திருடிய துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 14.11.2024 அன்று இந்த வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் உத்தரவுப்படி ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் 2023-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வங்கியில் 9 நபர்கள் அடகு வைத்த 561.5 கிராம் (70 பவுன்) தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் வங்கி லாக்கரில் இல்லை.
ேமலும் வாடிக்கையாளர்கள் 9 பேர் தங்களது நகைகளை அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகைகள் மாயமாகி இருந்தது. நகைகள் காணாமல் போனது பற்றி அதிகாரிகள் கேட்டபோது, துணை மேலாளர் மழுப்பலான தகவல்களை கூறியுள்ளார்.
இதையடுத்து பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான், காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திதில் வங்கி மேலாளருக்கு தெரியாமல் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் நகைகளை துணை மேலாளர் கணேஷ் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் மதுரை ஆனையூர் மல்லிகை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் : கனிமொழி எம்.பி., ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 7:57:02 AM (IST)

திமுக ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)
