» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு : அரசாணை வெளியீடு
திங்கள் 31, மார்ச் 2025 8:18:46 AM (IST)
தமிழகத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சமீபத்தில் மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவையாறு (தஞ்சை மாவட்டம்) ஆகிய 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டன.
அந்த வரிசையில் தற்போது கன்னியாகுமரி, போளூர், செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), சங்ககிரி (சேலம் மாவட்டம்), கோத்தகிரி (நீலகிரி மாவட்டம்), அவினாசி (திருப்பூர் மாவட்டம்), பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் இங்கு பாதாள சாக்கடை வசதி, சுகாதாரமான குடிநீர், கொசு ஒழிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், அதேவேளையில் சொத்து வரி, தொழில்வரி உள்ளிட்டவை உயரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை : விரிவுரையாளர் மீது புகார்
புதன் 2, ஏப்ரல் 2025 5:12:31 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!!
புதன் 2, ஏப்ரல் 2025 4:03:49 PM (IST)

கச்சத் தீவை மீட்கக் கோரி முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமி
புதன் 2, ஏப்ரல் 2025 3:43:41 PM (IST)

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புதன் 2, ஏப்ரல் 2025 3:30:52 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
