» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வங்கியில் கொள்ளையடித்த அண்ணன், தம்பி கைது : கிணற்றில் பதுக்கிய ரூ.13 கோடி நகைகள் மீட்பு!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 7:59:22 AM (IST)

கர்நாடகத்தில் வங்கி கொள்ளை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணன்-தம்பி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டியில் கிணற்றில் பதுக்கிவைத்திருந்த ரூ.13 கோடி தங்க நகைகள் மீட்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி டவுன் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி இந்த வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ 750 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் கடந்த 6 மாதங்களாக துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர்.
இந்தநிலையில், கொள்ளை நடந்தபோது நியாமதியில் இருந்த ஒரு பேக்கரி மட்டும் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரான விஜய்குமார் (வயது30) என்பவர் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர், அவரது தம்பி அஜய்குமார் (28) உள்பட 6 பேர் வங்கி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கைதான விஜய்குமார், அஜய்குமார் இருவரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. விஜய்குமார், அஜய் குமார் நியாமதியில் பேக்கரி நடத்தி வந்தனர். மற்ற 4 பேரும் கூலி வேலை பார்த்து வந்தனர். விஜய்குமார் ஏற்கனவே 2 முறை அந்த வங்கிக்கு சென்று கடன் கேட்டுள்ளார்.
ஆனால் வங்கி நிர்வாகம் கடன் கொடுக்க மறுத்துள்ளது. இதனால் கோபம் அடைந்த வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். இதற்காக தனது தம்பி மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த கூலி தொழி லாளர்களின் உதவியை நாடினார். இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். 6 பேரும் யூ-டியூப்பில் கொள்ளையடிப்பது எப்படி என்பது குறித்த வீடியோவை 2 மாதங்களாக பார்த்து திட்டம் வகுத்துள்ளனர்.
அதன்படி சம்பவத்தன்று 6 பேரும் வங்கிக்குள் நுழைந்து ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ 750 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பின்னர் நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து விஜய்குமாரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் உள்ள தோட்டத்தில் இருக்கும் 30 அடி ஆழ கிணற்றில் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உசிலம்பட்டி வந்து தங்க நகைகளை மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை : விரிவுரையாளர் மீது புகார்
புதன் 2, ஏப்ரல் 2025 5:12:31 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!!
புதன் 2, ஏப்ரல் 2025 4:03:49 PM (IST)

கச்சத் தீவை மீட்கக் கோரி முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமி
புதன் 2, ஏப்ரல் 2025 3:43:41 PM (IST)

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புதன் 2, ஏப்ரல் 2025 3:30:52 PM (IST)

குமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 3:19:25 PM (IST)
