» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது : ரூ.70 ஆயிரம் பணம், 5 பைக் பறிமுதல்
திங்கள் 26, மே 2025 8:56:32 AM (IST)
தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் பணம், 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஓம்சக்திநகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர்.
உடனடியாக போலீசார் விரைந்து சென்று சூதாடிக் கொண்டு இருந்த தாளமுத்துநகரை சேர்ந்த ஆதிலிங்கம் (வயது 44), வீரா (30), வசந்தலிங்கம் (22), ரமேஷ் (46), சஞ்சய்குமார் (31), தவமணி (62), ஆதிஆனந்தலிங்கம் (21), முத்துகுமார் (31) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்து 400 ரொக்கப்பணம், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 5:02:16 PM (IST)

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)
