» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது : ரூ.70 ஆயிரம் பணம், 5 பைக் பறிமுதல்

திங்கள் 26, மே 2025 8:56:32 AM (IST)

தூத்துக்குடியில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரம் பணம், 5 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஓம்சக்திநகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். 

உடனடியாக போலீசார் விரைந்து சென்று சூதாடிக் கொண்டு இருந்த தாளமுத்துநகரை சேர்ந்த ஆதிலிங்கம் (வயது 44), வீரா (30), வசந்தலிங்கம் (22), ரமேஷ் (46), சஞ்சய்குமார் (31), தவமணி (62), ஆதிஆனந்தலிங்கம் (21), முத்துகுமார் (31) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்து 400 ரொக்கப்பணம், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory