» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)

இந்தியாவுக்கான குரலாக தமிழ்நாட்டின் அன்புமொழியை பேசியுள்ளார் தங்கை கனிமொழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து உலக நாடுகளுக்கு விளக்க கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு உரையாற்றி வருகின்றனர். இந்த நிலையில், தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது: ஸ்பெயின் மண்ணில், "இந்தியாவின் தேசிய மொழி வேற்றுமையில் ஒற்றுமை" என உரக்கச்சொல்லி, மக்களின் உணர்வுகளைக் கைத்தட்டல்களாகவும் - உங்களால் அதிகம் பகிரப்படும் காணொளியாகவும் மாற்றிய தங்கை கனிமொழியை வாழ்த்தினேன்!
இந்திய நாட்டுக்கான குரலாகத் தமிழ்நாட்டின் அன்புமொழியை - ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:53:22 AM (IST)

ரயிலில் கடத்திய ரூ.35 லட்சம் மெத்தபெட்டமைன் பறிமுதல்: பெண் உள்பட 6 பேர் கைது!
வெள்ளி 6, ஜூன் 2025 8:50:31 AM (IST)

நகைக்காக சிறுவனை கொடூரமாக கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை : கணவருக்கு 3 வருடம் சிறை!!
வெள்ளி 6, ஜூன் 2025 8:46:33 AM (IST)

ஆழ்வார்திருநகரி ஆழ்வார் கோவிலில் 9 கருட சேவை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
வெள்ளி 6, ஜூன் 2025 8:17:25 AM (IST)

பழச்சாறில் மயக்க மருந்து கலந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!
வெள்ளி 6, ஜூன் 2025 8:06:56 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் டென்டா்கள் முறைகேடு: பாஜக மாவட்டத் தலைவா் குற்றச்சாட்டு
வெள்ளி 6, ஜூன் 2025 7:56:21 AM (IST)

என்னது இதுFeb 3, 1749 - 08:30:00 PM | Posted IP 104.2*****