» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரியில் தொடர் கஞ்சா வேட்டையில் காவல்துறை: 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் - 6 பேர் கைது!
திங்கள் 26, மே 2025 10:04:06 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகே கஞ்சா வழக்கில் 6பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். பள்ளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ராகுல்(20) மற்றும் ஆனந்த் என்பவரின் மகன் வளன்மேஸ்லினோ (19), நாகர்கோயில் பகுதியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை என்பவரின் கணேஷ் ராஜா (19), வடசேரி பகுதியை சேர்ந்த முத்து குமார் என்பவரின் மகன் ஆறுமுகம் (24),கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேஸ்வர் (22) மற்றும் விஜயன் என்பவரின் மகன் சூரிய (22) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் அனுமதி!!
புதன் 4, ஜூன் 2025 5:11:17 PM (IST)

அச்சிட்ட காகிதங்களில் உணவு வழங்கக் கூடாது: உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 5:02:16 PM (IST)

மனுஷி படத்தின் ஆட்சேபனை காட்சிகள்: சென்சார் போர்டு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 4, ஜூன் 2025 4:44:14 PM (IST)

தடுப்பணையில் விழுந்த 2 மாணவர்களை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல்!
புதன் 4, ஜூன் 2025 4:34:37 PM (IST)

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)
