» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநிலங்களவை எம்.பி., ஆகிறார் கமல்ஹாசன் : 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
புதன் 28, மே 2025 11:15:17 AM (IST)

மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.
இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர்களாக
1. திரு. பி.வில்சன் பி.எஸ்சி, பி.எல்.,
2. திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம்
3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா
ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். மக்களவைத் தேர்தலின்போது செய்த உடன்பாடு அடிப்படையில் ம.நீ.ம.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)

வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என நம்பினோம்: துரை வைகோ வருத்தம்
வெள்ளி 30, மே 2025 3:39:46 PM (IST)

நான் தவறு செய்யவில்லை; மன்னிப்புக் கேட்கப் போவதும் இல்லை: கமல் திட்டவட்டம்!
வெள்ளி 30, மே 2025 3:26:43 PM (IST)

காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
வெள்ளி 30, மே 2025 12:28:08 PM (IST)

மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)

திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)
