» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவட்டார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 29, மே 2025 5:39:49 PM (IST)

திருவட்டார் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (29.05.2025) திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
விழாவில் அவர் பேசுகையில் – தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி ஒரு பொற்கால ஆட்சியாகும். அதற்கு நமது கன்னியாகுமரி மாவட்டமே சான்றாகும். முதல் முதலாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பேருந்து நிலையம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி பெறப்பட்டு அந்தப் பணிகள் சிறப்பாக மேற்கொண்டு, இன்று பயன்பாட்டில் உள்ளது. மேலும் குளச்சல் பேருந்து நிலையத்தை ரூ.5 கோடி மதிப்பில் சீரமைத்து புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தக்கலை பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
களியக்காவிளை நம்முடைய எல்லை பகுதியாகும், அங்கு பேருந்து நிலையம் அமைக்க முதலில் ரூ.4 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமும், நகராட்சி துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சுமார் ரூ.9 கோடி பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் திட்டுவிளை பேருந்து நிலையம் கட்டுவதற்காகவும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகளும், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் குலசேகரத்தில் தும்பகோடு பேரூராட்சிக்கு பேருந்துநிலையம் சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்த்தாண்டத்தில் மிகப்பெரிய அளவில் சந்தை அமைப்பது என்பது நீண்ட நாள் கனவு அதையும் நிறைவேற்றி உள்ளோம். கல்லடிமாமூடு பகுதியில் மினி விளையாட்டு மைதானம் (ஸ்டேடியம்) அமைக்கப்பட்டு வருகிறது. மாத்தூர் தொட்டி பாலத்தில் பாலம் கட்டுவதற்கு ரூ.5 கோடியும், திற்ப்பரப்பு நீர்வீழ்ச்சி அருகில் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் மாத்தூர் தொட்டி பாலம் சீரமைப்பதற்காக ரூ.3 கோடி என அடுக்கிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் நமது கன்னியாகுமரி மாவட்டங்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். உதாரணமாக கன்னியாகுமரியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவினார்கள். நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுலாப் பயணிகள் 133 அடி உயரத்தில் உள்ள அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட அய்யன் திருவள்ளுவர் சிலையிலிருந்து விவேகானந்தர் பாறையினை இணைத்து ரூ.37 கோடி மதிப்பில் வரலாற்று சிறப்பு மிக்க கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்துள்ளார்கள்.
நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான ஆட்சி என்பது மக்களுக்கு என்ன தேவை என்று பார்த்து பார்த்து செய்கின்ற ஒரு உன்னதாமான ஆட்சியாகும். இவ்வாட்சித்தான் மிகச்சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டங்களின் பயன்களை தான் நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். இதுப்போன்ற பல்வேறு திட்டங்கள் இன்னும் தமிழ்நாட்டில் தொடர வேண்டும்.
தமிழ்நாடு பல்வேறு காரணிகளில் இந்தியாவில் உயர்ந்து இருப்பது மட்டுமல்லாது, இன்றைக்கு உலகத்திற்கே சவால் விடும் அளவிற்கு நம்முடைய பணிகள் மற்றும் முன்னெடுப்புகள் வெற்றி பெற்று வருகிறது. நமது மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிர்வாகம், அரசியல் நிர்வாகிகள் இணைந்து பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
நமது மாவட்டத்தில் 45 வருடங்களுக்கு மேலாக பட்டா கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. எந்த மாவட்டத்திலும் நடைபெறதா அளவுக்கு நம்முடைய மாவட்ட ஆட்சியர் , துறை அலுவலர்கள், நான் என அனைவரும் இணைந்து மேற்கொண்ட முன்னெடுப்பின் காரணமாக 14,000க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு பல்வேறு விதமான பட்டாக்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி திருவட்டார் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.55 கோடி மதிப்பில் திருவட்டார் பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்னுடைய நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இப்பேருந்து நிலையமானது 48.50 சென்ட் பரப்பளவு கொண்டது. பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் 12 கடைகளும், முதல் தளத்தில் 6 கடைகளும் என மொத்தம் 18 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
பேருந்து நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் இருக்கைகள், மின்சார வசதிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், இலவச மற்றும் கட்டண கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கான சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையத்திற்கு 70 அரசு பேருந்துகளும், 2 தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன.
இப்பேருந்து நிலையத்திற்கு தினசரி சுமார் 1800 பயணிகள் வருகை புரிக்கின்றனர். ஆதிகேசவ பெருமாள் கோவில் என்பது தென் சமஸ்தானத்தில் மிகவும் முக்கியமான கோவிலாகும். நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் 480 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு குடமுழுக்கு செய்யக்கூடிய வாய்ப்பை அளித்துள்ளார்கள். நமது மாவட்டத்தில் உள்ள கோயிலுகளுக்கு தேவையான அனைத்து சீரமைப்பு பணிகளையும் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக மேற்கொள்ள நிதிஒதுக்கீடு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி மற்றுத் திருவட்டார் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் பேருராட்சிகள் இராமலிங்கம், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், திருவட்டார் செயல் அலுவலர் தர்மகுலசிங்கம், பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் சத்தியதாஸ், உதவி செயற்பொறியாளர் சிவசங்கலிங்கம், பாண்டியராஜன், அரசு வழக்கறிஞர் ஜாண்சன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், வீரவர்க்கீஸ், ஜாண் பிரைட், மரியசிசுகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : அன்புமணி பேட்டி
வெள்ளி 30, மே 2025 5:29:02 PM (IST)

போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)

வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என நம்பினோம்: துரை வைகோ வருத்தம்
வெள்ளி 30, மே 2025 3:39:46 PM (IST)

நான் தவறு செய்யவில்லை; மன்னிப்புக் கேட்கப் போவதும் இல்லை: கமல் திட்டவட்டம்!
வெள்ளி 30, மே 2025 3:26:43 PM (IST)

காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
வெள்ளி 30, மே 2025 12:28:08 PM (IST)

மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)

TAMILANமே 30, 2025 - 11:15:59 AM | Posted IP 162.1*****