» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)



தமிழ்நாட்டில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் என்று கலைஞர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞர் 102வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட சண்முகபுரம் அண்ணாநகர் பிரையண்ட் நகர் பகுதி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சோனா மஹாலில் சுரேஷ்குமார், காமராஜர் மஹாலில் ராமகிருஷ்ணன், ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தலா 102 பேருக்கு அரிசிசக்கரைபொங்கல் மற்றும் திமுகவினருக்கு வேஷ்டி சட்டை ஆகியவற்றை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன்பெரியசாமி ஆகியோர் வழங்கினர்.

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் "1949ல் திமுக உருவாக்கப்பட்டு அண்ணாவால் வழிநடத்தப்பட்டு அவரது மறைவிற்கு பின்பு கலைஞர் பொறுப்பேற்ற பின் எல்லா தரப்பினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கருதி முன்னுரிமை வழங்கினார். குறிப்பாக பெண்களுக்கு சொத்துரிமை, வழங்க வேண்டும் பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தை சட்டமாக்கி நடைமுறை படுத்தினார். அண்ணா கொள்கையை முன்நிறுத்தி பெரியாரையும் முதன்மை படுத்தி கொள்கையில் தடம் மாறாமல் தமிழர்கள் நலனுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்த கலைஞர் வழியில் இன்று வரை உறுதியாக நின்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் பணியாற்றி வருவதால் இந்தியாவிற்கே தமிழகம் முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. 

எல்லா துறைகளிலும் வளர்ச்சி 9.6 சதவீதம் இருந்து வருகிறது. வறுமைகோட்டிற்கு கீழே இருப்பவர்கள் சதவீதம் 11.5 சதவீதம் தமிழகத்தில் 1.4 சதவீதம் தான் தொழில் வளர்ச்சி மூலம் தனிபர் வருமானம் அதிகரித்துள்ளது. வடக்கு மாவட்டத்தில் எல்லா பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. 6ம் தேதி மாநகர திமுக சார்பில் 102 பேருக்கு தையல் மிஷின் வழங்கப்படுகிறது. கனிமொழி எம்.பி கலந்து கொண்டு வழங்குகிறார். 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் 2வது முறையாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலர வேண்டும்அதற்கு அனைவரும் சூளுரை ஏற்று பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், ராஜ்குமார், கவுன்சிலர்கள் அதிஷ்டமணி, பொன்னப்பன், கந்தசாமி, பாப்பாத்தி, சரண்யா, வைதேகி, விஜயலட்சுமி, சரவணக்குமார், அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், ரெக்ஸின், ராஜேந்திரன், பவாணி, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், ஆதிதிராவிட நல அணி பெருமாள், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், பாலகுருசாமி, லியோஜான்சன், சுப்பையா, சிங்கராஜ், செல்வராஜ், நவநீதன், சரவணன், மூக்கையா, மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக 3சென்ட் அந்தோணியார்புரத்தில் பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினர். மண்டல மேலாளர் சாந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory