» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)
தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில், விளம்பரங்கள், போஸ்டர்கள், கூப்பன்கள் தபால்காரர் மூலம் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை, பொதுமக்களுக்கு விளம்பரங்கள் சென்றடைய Direct Post எனும் சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் துண்டு பிரசுரங்கள் அல்லது விளம்பரங்கள் போன்றவை ஒரு குறிப்பிட்ட முகவரி இல்லாமல் அனைத்து மக்களுக்கும் விளம்பர அஞ்சல்களை அனுப்ப உதவுகிறது.
நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது குறிப்பிட்ட ஊர்களிலோ தங்கள் விளம்பரங்களை அந்தந்த பகுதி மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பத்தின்படி தேவைப்படும் Pincodeகளுக்கு மட்டும் டெலிவரி செய்யப்படும். இதற்கு குறைந்தபட்சம் 1000 எண்ணிக்கை தேவை மற்றும் A4, A3 வரையிலான அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ அல்லது கடைகளுக்கோ விளம்பரம் செய்ய இந்த Direct Post சேவையை பயன்படுத்தி விளம்பரம் செய்துகொள்ளலாம். விளம்பரம் தேவைப்படும் பகுதியின் அனைத்து வீடுகளுக்கும் இந்த விளம்பரப் பிரசுரங்கள் தபால்காரர் மூலம் பட்டுவாடா செய்யப்படும். போஸ்டர்கள், கூப்பன்கள் போன்றவைகளும் பட்டுவாடா செய்யப்படும்.
நேரடியாக அஞ்சல் பெட்டிகளில் போடப்படும் Direct Postகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர தேவைகளுக்கு இந்த திட்டத்தினை உபயோகித்து பயனடையுமாறு தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்(பொறுப்பு), வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திர கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் விவரங்களுக்கு எங்கள் வணிக அலுவலரை 9841875710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கமல் நடித்துள்ள தக் லைஃப் நாளை ரிலீஸ்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!
புதன் 4, ஜூன் 2025 12:31:02 PM (IST)

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் தேசிய மொழி: கனிமொழியை பாராட்டிய முதல்வர்!
புதன் 4, ஜூன் 2025 12:16:49 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் விளக்க பயணம்: சென்னை திரும்பிய கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு!
புதன் 4, ஜூன் 2025 11:34:15 AM (IST)

உயர்நீதிமன்ற தடையை மீறி கட்டணம் வசூல்: புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் லாரிகள் முற்றுகை
புதன் 4, ஜூன் 2025 10:39:10 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் கொலை வழக்கில் 4பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 3, ஜூன் 2025 7:59:42 PM (IST)

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
செவ்வாய் 3, ஜூன் 2025 5:31:25 PM (IST)
