» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஏடிஜிபி ஆய்வு

சனி 21, ஜூன் 2025 8:32:35 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ஜூலை 1இல் யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, கோயிலை காவல் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் நேற்று பார்வையிட்டு, கோயிலில் விமான தளம், யாக சாலை மண்டபம், பக்தர்கள் தரிசன வரிசை, வாகன நிறுத்தங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றை அமைப்பது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருடன் ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆய்வின் போது தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந் சின்ஹா, டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி , தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண், திருச்செந்தூர் டிஎஸ்பி குருவெங்கட்ராஜ§, ஆய்வாளர்கள் கனகராஜன், இன்னோஸ்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory