» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 25, ஜூன் 2025 12:01:34 PM (IST)

இந்திய ரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கம். ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக அவர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், "ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டும் வரும் ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரயில்வே அட்டவணை ரயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. இந்தநிலையில், இதோடு சேர்த்து நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான ரயில் டிக்கெட் விலையை உயர்த்தி ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று பிரதமர் மோடியையும், மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவையும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இந்திய ரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல ரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
ஏ.சி. பெட்டிகளை உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல - அது ஒரு குடும்பம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்ட சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு மதியம் 12.10 மணியளவில் வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி!!
புதன் 25, ஜூன் 2025 5:22:49 PM (IST)

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 5:02:23 PM (IST)

சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி
புதன் 25, ஜூன் 2025 4:09:37 PM (IST)

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
புதன் 25, ஜூன் 2025 12:47:01 PM (IST)

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார் அண்ணாவை விமசிப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!
புதன் 25, ஜூன் 2025 11:13:36 AM (IST)
