» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!!

புதன் 25, ஜூன் 2025 12:47:01 PM (IST)

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(30). இந்து முன்னணியில் திருப்பூர் வடக்கு வக்கீல் பிரிவு ஒன்றிய தலைவராக உள்ளார். இது தவிர பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று (ஜூன் 25) அதிகாலை தாம் வசிக்கும் காமராஜர் வீதியில் மர்ம நபர்களால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சடலத்தை கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான முழுப்பின்னணி என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory