» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!

செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)



வண்டலூர் உயிரியல் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளதால் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், சிறுத்தை, புலி, கரடி, யானை, மான்கள் மற்றும் மனித குரங்கு உள்பட பல விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. இவைகளை கண்டு ரசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில், பூங்காவில் மஞ்சள் அனகோண்டா பாம்பு பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பாம்பு நேற்று காலை 10 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த மஞ்சள் நிற அனகோண்டா கடந்தாண்டு 9 குட்டிகளை ஈன்றது. இங்குள்ள மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றது. தற்போது மஞ்சள் நிற அனகோண்டா பாம்பு 10 குட்டிகளை ஈன்றுள்ளதால் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அனகோண்டா குட்டிகளை தனியாக ஒரு கண்ணாடி கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory