» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி தகவல்
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 3:50:20 PM (IST)
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தீப்பெட்டிக்கு 18 சதவீதமாக இருந்த வரியை மத்திய அரசிடம் பேசி 12 சதவீதமாக குறைத்தோம். தீப்பெட்டிக்கு நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டுமென்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம். கோவில்பட்டி என்று சொன்னாலே கடலை மிட்டாய் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெயர் போன ஊர். கோவில்பட்டியில் தயாரிக்கபடும் கடலை மிட்டாய் பெயரை மற்ற இடங்களில் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் தரம் குறைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்தனர். இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்களுக்கான ஒரு லேபிளை தயார் செய்து வெளியே விற்பனை செய்ய முயற்சிக்கலாம்." என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி
சனி 2, ஆகஸ்ட் 2025 3:32:12 PM (IST)

கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 10:55:08 AM (IST)

பெற்றோர்களை கௌரவமாக நடத்த வேண்டும் : அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 10:29:29 AM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது : எடப்பாடி பழனிசாமி பேச்சு
சனி 2, ஆகஸ்ட் 2025 8:57:53 AM (IST)

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
சனி 2, ஆகஸ்ட் 2025 8:47:15 AM (IST)

தி.மலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 5:48:16 PM (IST)
