» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விடுதி உரிமையாளர் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:22:23 AM (IST)
தூத்துக்குடியில் தனியார் விடுதிக்குள் நுழைந்து உரிமையாளர் உள்பட 2 பேரை வெட்டிய சம்பவம் குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி, போல்பேட்டையைச் சேர்ந்தவர் முருகானந்தம் (56). இவர், எட்டயபுரம் சாலையில் தனியார் விடுதி நடத்தி வருகிறார். இதில், துப்புரவுப் பணியாளராக லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பார்வதி பணியாற்றி வருகிறார். நேற்று மாலையில் பார்வதியின் மகன் செல்வம், மற்றும் அவரது நண்பரும் விடுதிக்கு வந்துள்ளனர்.
மேலும், முருகானந்தம் மற்றும் பார்வதியிடம் தகராறு செய்ததோடு, அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம். இதில், பலத்த காயமடைந்த முருகானந்தம், பார்வதி ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
செவ்வாய் 12, ஆகஸ்ட் 2025 8:26:43 AM (IST)

திமுகவின் தோல்வி தெற்கில் இருந்து ஆரம்பிக்கிறது : தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:01:42 PM (IST)

ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 3:42:23 PM (IST)

தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றியது : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 10:53:36 AM (IST)

தீபாவளியை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாகவே துவக்கம்!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 10:33:49 AM (IST)

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவியிலும் குளித்து குதூகலம்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 8:48:22 AM (IST)
