» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6லட்சம் பணம் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை

புதன் 13, ஆகஸ்ட் 2025 10:57:48 AM (IST)



தூத்துக்குடியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் ஸ்ரீ முருகன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலமாக  இருசக்கர வாகனங்களுக்கு கடன் உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இன்று காலை 07.30 மணி அளவில் திறக்க வந்தபோது, கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.6 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory