» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுதந்திர தினம்: திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:49:58 PM (IST)
கன்னியாகுமரியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள கடற்கரை பகுதி, தனியார் தங்கும் விடுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீசார் நவீன ரோந்து படகுகளில் கடல் வழி பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் காலமானார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:19:45 PM (IST)

தருவைக்குளத்தில் கண்டறியப்பட்ட சங்க கால மணல் கல் சிற்பம் : தொல்லியல் ஆர்வலர் தகவல்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 6:08:37 PM (IST)

புதிய ரயில் நிறுத்தங்கள் அறிவிப்பில் குமரி மாவட்டம் புறக்கணிப்பு: பயணிகள் ஏமாற்றம்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:48:58 AM (IST)

சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்றினார்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 11:06:59 AM (IST)

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:24:14 AM (IST)

சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்: விஜய் வசந்த் எம்.பி
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:15:27 AM (IST)
