» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

புதன் 13, ஆகஸ்ட் 2025 8:46:23 PM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றொரு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கோவில்பட்டி மேட்டுதெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி கவிதா (25) என்பவர் பாலியல் தொந்தரவு செய்தும், அதே சிறுமியை தூத்துக்குடி பூபாண்டியபுரத்தைச் சேர்ந்த ஆத்தியப்பன் மகன் தங்கதுரை (41) என்பவர் பாலியல் வன்கொடுமையும் செய்த வழக்கில் மேற்படி இருவரையும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பீரித்தா நேற்று குற்றவாளி கவிதா என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5,000 அபராதமும், குற்றவாளி தங்கதுரைக்கு 20 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000/- அபராதமும் தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ஜேசுராஜ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory