» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் சம்பவம் குறித்து உரிய விசாரணை : இபிஎஸ் வலியுறுத்தல்!
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:01:11 PM (IST)
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு... "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என்ற புகழோடு அஇஅதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ‘ஸ்டாலின் மாடல்’ அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான்.
அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ‘ஆக.. தனிப்பட்ட காரணம்’ Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்துக் கொள்ளட்டும். அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில், இப்போதாவது தனது Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா இந்த பொம்மை முதல்வர்?
நான் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து வீர வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன்? படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள்; வெடிகுண்டுகள் அல்ல!
நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் திமுக ஆட்சியிடம் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போக்சோ வழக்கில் பெண் உட்பட 2பேருக்கு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 13, ஆகஸ்ட் 2025 8:46:23 PM (IST)

கவின் ஆவணக் கொலை வழக்கு: சுர்ஜித்தின் சித்தி மகனை கைது செய்தது சிபிசிஐடி!
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:52:10 PM (IST)

தமிழகத்தில் 207 அரசு பள்ளிகள் மூடல்: திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:27:46 PM (IST)

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர் கைது!
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:15:49 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 52,098 மனுக்கள் பெறப்பட்டுள்ளது: ஆட்சியர் தகவல்
புதன் 13, ஆகஸ்ட் 2025 5:04:54 PM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை!
புதன் 13, ஆகஸ்ட் 2025 4:54:59 PM (IST)
