» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூய்மைப் பணியாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது: விஜய் கண்டனம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:31:07 AM (IST)
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா?
குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?
ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும் என விஜய் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:51:33 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:46:43 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு உட்பட 6 திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:27:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின்: முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 3:54:06 PM (IST)

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:50:49 PM (IST)

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:43:07 PM (IST)
