» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் போதைப்பொருள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:51:33 PM (IST)
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின வாழ்த்து குறிப்பில் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; "தமிழ் மொழியும், கலாசார மரபும் நமது தேசத்தின் பெருமைகள். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மரபின் மிகப்பெரிய அபிமானி நமது பிரதமர் நரேந்திர மோடி.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. வேலைவாய்ப்பு இன்றி வெறும் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்களாக மாணவர்கள் வெளியேறுகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம் நடக்கிறது.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிக குற்றங்கள் நடக்கின்றன. நமது சகோதரிகளும், மகள்களும் வீட்டை விட்டு வெளியேற அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
ஏழைகளுக்கு எதிராக கல்வி மற்றும் சமூக பாகுபாடு நிலவுகிறது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிறர் இடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறியுள்ளது.
பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் ஆன பிறகும் பாகுபாடு நிலவுவது நாம் அவமானப்படக்கூடியது. வறுமை நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகவும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:46:43 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு உட்பட 6 திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:27:50 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின்: முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 3:54:06 PM (IST)

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:50:49 PM (IST)

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:43:07 PM (IST)

தூய்மைப் பணியாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது: விஜய் கண்டனம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:31:07 AM (IST)

அன்புAug 14, 2025 - 07:25:43 PM | Posted IP 162.1*****