» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!

சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

வடசேரியில் பராமரிப்பு பணியின்போது, மின்கம்பத்தில் தாெங்கியவாறு கேங்மேன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணியில் போது புத்தேரி பகுதியில் உள்ள  மின்கம்பத்தில் பணியில் இருந்த கேங்மேன் உடன்குடியைச் சேர்ந்த சுரேஷ்(32) என்ற வாலிபர் மின்கம்பத்தில் தொங்கியவாறு திடீர் உயிரிழந்தார். 

அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது மாரடைப்பு (வலிப்பு)  ஏற்பட்டு பலியானாரா என்று  வடசேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் இருந்து உடலை இறக்கினர். போலீசார்  உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory