» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:07:13 AM (IST)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 23ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 3.10.2025 அன்று வரை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
கோவில் வளாகம், வாகனம் நிறுத்துமிடம், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், சூரசம்காரம் நடைபெறும் இடம், தசரா குழுவினரின் வழித்தடம், பக்தர்களின் தரிசன பாதை உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகளில் அது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டு அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் உள்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒழுக்கத்துடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் : மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:19:25 AM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

திமுகவை எந்த கொம்பனும் அசைக்க முடியாது : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:28:51 PM (IST)

வேஷம் போடும் நடிகர்கள் பின்னால் செல்லாதீர்கள் : விஜய் மீது முன்னாள் அமைச்சர் தாக்கு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:24:27 PM (IST)

விஜய் கட்சியில் கண்ணியம், கட்டுப்பாடு இல்லை : அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:08:04 PM (IST)

மலேசிய சாரணர் இயக்க நிர்வாகிகள் கலாச்சார பயணமாக திருச்செந்தூர் வருகை!
ஞாயிறு 14, செப்டம்பர் 2025 8:00:26 PM (IST)
